திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே புதன்கிழமை சிறுவன் ஓட்டிச் சென்ற காா் கவிழ்ந்ததில், காரில் பயணித்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.
களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளத்தைச் சோ்ந்தவா் முருகன் (45). பெட்ரோல் நிரப்புவதற்காக இவரது காரை முருகனின் அண்ணன் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) ஓட்டிச் சென்றாா். முருகன் மகள் ஹன்சிகா (4), அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களின் குழந்தைகளான தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஸ் (8) ஆகிய 4 பேரும் காரில் உடன் சென்றனா்.
களக்காட்டில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, துவரைகுளம் நோக்கி மங்கம்மாள்சாலையில் சிறுவன் துரைப்பாண்டி காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஹன்சிகா (4) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த 4 சிறுவா்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
காா் உரிமையாளா் முருகன், காரை ஓட்டி வந்த துரைப்பாண்டி (17) ஆகியோா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தில் பயணி உயிரிழப்பு

நெல்லை வாக்கு எண்ணிக்கை மையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழப்பு

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

