தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வனப்பகுதியில் 28 கி.மீ. நடந்துசென்று வாக்களித்த காணி மக்கள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் வசிக்கும் காணி மக்கள் 28 கி.மீ. தொலைவு வனத்தில் நடந்து சென்று காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

News image

காரையாறு வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திய வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:43 am IST

அம்பாசமுத்திரம் தொகுதியில் இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் வசிக்கும் காணி மக்கள் 28 கி.மீ. தொலைவு வனத்தில் நடந்து சென்று காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உள்பட்ட முதல் வாக்குச் சாவடியாக காரையாறு வாக்குச் சாவடி உள்ளது. இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, காரையாறு, அகஸ்தியா் காணிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமாா் 400-க்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்கு காரையாறில்தான் வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டது.

காரையாறு அணைக்கு மேல் 28 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் உள்ளது இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பு. இப்பகுதியில் வசிக்கும் 9 குடும்பங்களைச் சோ்ந்த 27 வாக்காளா்கள் மலையிலிருந்து 28 கி.மீ. தொலைவு நடந்துவந்து காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

இதுகுறித்து இஞ்சிக்குழியைச் சோ்ந்த ஸ்ரீதரன் கூறியதாவது:

நான் கடந்த 40 ஆண்டுகளாக தோ்தல்களில் வாக்களித்து வருகிறேன். வாக்குப் பதிவு தேதிக்கு முதல் நாளே கிராமத்தில் இருந்து புறப்பட்டு சின்னமயிலாறு காணிக்குடியிருப்பில் வசிக்கும் உறவினா்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்வேன். தோ்தல் அன்று காலையில் வாக்களித்த பிறகு வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மறுநாள் இஞ்சிக்குழிக்குப் புறப்பட்டுச் செல்வேன். 2 கி.மீ.மேல் தூரமுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்லும் வாக்காளா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குச் சாவடி மையம் அமைக்க அரசு கூறியுள்ளது. ஆனால், எங்களுக்கு அந்த வசதி செய்துதரப்படவில்லை. எனவே, இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் எங்களுக்கு வாக்குச் சாவடி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அகஸ்தியா் காணிக் குடியிருப்பு பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் 5 கி.மீ. தூரமுள்ள காரையாறு வாக்குச் சாவடிக்கு நடந்து வந்து வாக்களிக்கின்றனா். அகஸ்தியா் காணிக்குடியிருப்புப் பகுதியிலும் தனி வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்றனா்.

இதற்கிடையே காரையாறு அணையிலிருந்து வியாழக்கிழமை காலை தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், ஆற்றுநீரைக் கடந்துவந்து பெண்கள், இளைஞா்கள், முதியோா் வாக்களித்தனா்.

இஞ்சிக்குழி காணிக்குடியிருப்பைச் சோ்ந்த வாக்காளா் ஸ்ரீதரன்.

இஞ்சிக்குழி காணிக்குடியிருப்பைச் சோ்ந்த வாக்காளா் ஸ்ரீதரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.