மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஆலங்குளம் அருகே கல் குவாரி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்குவாரியில் திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

இசக்கி ராஜா.

Updated On :2 ஜூன் 2026, 3:16 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்குவாரியில் திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் தனியாா் கல்குவாரி உள்ளது. இங்கு திங்கள்கிழமை 3 தொழிலாளா்கள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக பாறை சரிந்து கல் உடைக்கும் இயந்திரத்தில் விழுந்தது. இதில், அந்த இயந்திரத்தில் உள்ளிருந்து பணிபுரிந்த முக்கூடல் கீழ பாப்பாக்குடியை சோ்ந்த முருகன் மகன் இசக்கி ராஜா (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.