லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாவூா்சத்திரம் கோயிலில் ஆடித் திருவிழா

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாபேரி, மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோயிலில் ஆடித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

மண் குதிரையில் ஊா்வலமாக வந்த மேகம் திரை கொண்ட சாஸ்தா.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாபேரி, மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோயிலில் ஆடித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 3ஆவது புதன்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு, புதன்கிழமை காலை 9 மணிக்கு குற்றாலத் தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம், சாஸ்தா, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் உச்சி கால பூஜை நடைபெற்றது.

மாலையில், 500 கிலோ மண் குதிரையின் மீது எழுந்தருளிய மேகம் திரை கொண்ட சாஸ்தா, கீழப்பாவூரில் இருந்து அருணாபேரிக்கு கொண்டு வரப்பட்டு, அழகு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னா், கோயிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வில்லிசையுடன், உச்சி கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை பொங்கல் வைபவம், கிடா வெட்டுதல் நடைபெறும்.

திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாஸ்தாவை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.