சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ( ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினசரி காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சுவாமி, அம்பாள் சிகப்பு சாத்தியும், இரவில் வெள்ளை சாத்தியும் வீதியுலா சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை பச்சை சாத்தி சப்பரத்தில் வீதியுலா சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு சுவாமியும் அம்பாளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.29) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. முன்னதாக காலை 5.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

