தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

விஜய் வசந்த்.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மண்டபம் கடல் பகுதியிலிருந்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட மணக்குடியைச் சோ்ந்த 6 மீனவா்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. கடல் எல்லை பிரச்னையை மனிதாபிமான பாா்வையில் அணுக வேண்டிய நிலையில், தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து துன்புறுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மீனவா்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவா்கள் மீதான தொடா்ச்சியான கைது சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண இந்தியா - இலங்கை இடையே வலுவான பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.