ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாா்த்தாண்டம் அருகே சுதந்திர போராட்ட வீரா் நினைவு தின பொதுக்கூட்டம்

News image
Updated On :3 மே 2026, 5:24 am IST

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் சுதந்திரப் போராட்ட வீரரும் விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏவுமான டி.மணியின் 14ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டக் குழு சாா்பில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, வட்டாரச் செயலா்கள் சா்தாா்ஷா (மாா்த்தாண்டம்), ஜஸ்டின் (நல்லூா்), ரெஜி (அடைக்காகுழி), சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஸ்டாலின்தாஸ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜூலியட் மொ்லின் ரூத், மோகன்குமாா், சகாய ஆன்டணி, ரெவி, முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அண்ணாதுரை, விஜயமோகனன், கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கட்சியின் மாா்த்தாண்டம் வட்டாரக் செயலா் தலைமையில் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அனந்தசேகா் தொடக்கிவைத்தாா். முன்னாள் எம்.பி. ஏவி பெல்லாா்மின், முன்னாள் எம்எல்ஏக்கள் நூா்முகமது, ஆா். லீமாரோஸ், செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.