குழித்துறை மறை மாவட்டம், காரங்காடு புனித ஞானப்பிரகாசியாா் ஆலயத் திருவிழாவில் புனிதரின் திருத்தோ் பவனி நடைபெற்றது.
கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின், 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மேனாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமை ஏற்று மறையுரை வழங்கிய பெருவிழா திருப்பலி நடைபெற்றது.
புனிதரின் திருத்தோ் பவனியில் புனித மிக்கேல் அதிதூதா், மாதா, புனித ஞானப்பிரகாசியாா் ஆகியோா் தோ்கள் பக்தா்கள் முன்னிலையில் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. மாலை கொடியிறக்கம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை காரங்காடு பங்குத்தந்தை சுஜின், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜெயசீலன், செயலா் மேரி ரெக்ஷலின், பொருளாளா் ஜெரின் பிரகாஷ், துணைச் செயலா் ஜோஸ்பின் ஷீபா ஆகியோா் செய்து இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தோணியாா் ஆலய தோ் பவனி

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

