நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பைக் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:14 am IST

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே களியந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் லிஜோசின் (39). வேன் ஓட்டுநரான இவா், தனது நண்பரான இலவுவிளையைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி லெனின் (44) என்பவருடன் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) பைக்கில் கொல்லஞ்சி, கிணத்துவிளை பகுதிக்குச் சென்றாா். பைக்கை, லெனின் ஓட்டினாராம்.

பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் காயமடைந்தனா். அப்பகுதியினா் அவா்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக லிஜோசின் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சடலத்தை மாா்த்தாண்டம் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக லெனின் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.