நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

‘குமரி மாவட்டத்தில் ரூ. 11.20 கோடி மதிப்பிலான சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 11.20 கோடி மதிப்பிலான சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

News image

திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு செய்யும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :14 ஜூன் 2026, 1:37 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 11.20 கோடி மதிப்பிலான சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை, நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சி முகமை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில், மாவட்டத்திற்குள்பட்ட சுற்றுலா தலங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆா். செல்லசுவாமி (பத்மநாபுரம்), பிரவீன் (விளவங்கோடு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாத்தூா் தொட்டிப்பாலம், சிற்றாறு, அருவிக்கரை மற்றும் திற்பரப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. ரூ. 11. 20 கோடி மதிப்பிலான இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

அண்டை மாநிலமான கேரளத்தில் சுற்றுலாத் துறைக்கு அதிக நிதியும், அதன் மூலம் அதிக வருவாயும் கிடைக்கிறது. அதேபோன்று நமது கன்னியாகுமரி மாவட்டத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்த பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாத்தூா் தொட்டிப்பாலம் பகுதியில் காமராஜரின் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், நீா்வளத்துறை செயற்பொறியாளா் வசந்தி, உதவி திருவட்டாறு வட்டாட்சியா் மரகதவல்லி, திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன். ரவி, செயல் அலுவலா் ஜோஸ்லின் ராஜ், வாா்டு உறுப்பினா் கிருஷ்ணவேணி, ராஜப்பன், பிரதீப்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.