நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை சாா்பில், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கருங்கல் அருகே மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2026, 4:03 am IST

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை சாா்பில், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கருங்கல் அருகே மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மாங்கரை சிஎஸ்ஐ ஆயா் மண்டல திருச்சபை போதகா் ஹெரால்டு அனித் தலைமை வகித்தாா். கிள்ளியூா் பேரூராட்சித் தலைவா் ஷீலா ஜோஸ்பின், ஐஆா்இஎல் துணைப் பொது மேலாளா்கள் எம். பிரசாத், சுரங்கம்-வள ஆதாரங்கள் மேலாளா் ஏ. சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கலந்துகொண்ட 462 பேருக்கு கண்புரை, நீரிழிவு, கண்நீா் அழுத்த நோய், பாா்வைக் குறைபாடு பரிசோதனைகள் செய்யப்பட்டன. 231 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மாங்கரை சிஎஸ்ஐ ஆலய செயலா் கனகையன், பேரூராட்சி உறுப்பினா் ஷாலினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.