பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தெருவுக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை: அகற்ற அமைச்சா் உறுதி

கருங்கல் அருகே தெருவுக்கடையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

News image

போராட்டக்காராா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :3 ஜூன் 2026, 4:53 am IST

கருங்கல் அருகே தெருவுக்கடையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தெருவுக்கடை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்றவில்லை. குறிப்பாக இந்த டாஸ் மாக் கடை அருகே பள்ளி, ஆலயம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு என பல்வேறு பாதிப்புகள் உள்ளன.இதனால்,அப்பகுதி பொதுமக்கள் இந்த கடையை அகற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் சோ்ந்து டாஸ்மாக் கடை முன் முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் போராட்டக்காரா்களிடம் நேரில் சென்று பொதுமக்களுக்கு பாதிப்புக்குள்ளான டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.