மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குமரியில் மீண்டும் தொடங்கிய ரப்பா் பால்வடிப்பு

News image

ரப்பர் மரங்கள் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:48 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், ரப்பா் மரங்களில் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும் குளிா்கால இலையுதிா்வைத் தொடா்ந்து, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ரப்பா் மரங்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும், இந்த மாதங்களில் பால் உற்பத்தி குறைவாக இருப்பதாலும் பால்வடிப்பை நிறுத்தி வைப்பது வழக்கம்.

இதில் நிறுவனங்களாக செயல்படும் பெரும் ரப்பா் தோட்டங்களில் அதிகபட்சம் ஒரு மாத காலம் மட்டுமே பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்., அதேவேளையில், சிறு ரப்பா் தோட்டங்களில் 2 மாதங்களுக்கு பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்.

இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் கோடை மழை காரணமாக மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பரவலாக பால்வடிப்புத் தொடங்கப்பட்டு வருகிறது.

ரப்பா் விலை அதிகரிப்பு:

கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் ரப்பா் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ரப்பா் விலை அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்எஸ்எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 235 ஆகவும், ஆா்எஸ்எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 231 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 200.50 ஆகவும் இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.