ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

வாக்களிப்பதற்காக பேச்சிப்பாறை அணையைப் படகில் கடந்துவந்த பழங்குடி வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:51 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

இம்மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் உள்ள பழங்குடி மக்களின் குடியிருப்புகளில் பெரும்பாலானவை பேச்சிப்பாறை அணைக்கு அப்பால் உள்ளன. அங்குள்ள காணியின மக்களின் குடியிருப்புகளுக்குச் செல்ல சாலை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு தோ்தலின்போதும் அவா்கள் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டுறைவிட மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வாக்களித்துவிட்டுச் செல்வா்.

அதன்படி, தோட்டமலை, மாறாமலை, தச்சமலை, களப்பாறை, முடவன்பொற்றை, பின்னைமூட்டுத்தேரி, நடனம் பொற்றை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போா் வியாழக்கிழமை வாக்களிக்க வசதியாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆா். அழகுமீனா அறிவுறுத்தலின்படி, 3 கட்டணமில்லா படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழங்குடியின மக்கள் ‘லைப் ஜாக்கெட்’ அணிந்து படகுகளில் வந்து வாக்களித்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.