தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: ரெ.மகேஷ்

கூட்டத்தில் பேசுகிறாா் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:28 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் வகையில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தெரிவித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நாகா்கோவில் அருகே இறச்சகுளத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரை மலரக் கூடாது என்ற எண்ணத்தில் 5 தொகுதிகளையும் தாமரைச் சின்னத்துக்கு ஒதுக்கியிருக்கின்றனா். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று 2 ஆவது முறையாக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராக அமா்வது உறுதி. கன்னியாகுமரி மாவட்டத்திலும் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன், மதிமுக மாவட்டச் செயலாளா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அந்தோணி, கூட்டணி கட்சி மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.