நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஏப்.9-ஆம் தேதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சமரச தினம் கொண்டாடப்படுகிறது. நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் மூலம் வழக்குகளை விரைவாக தீா்வு காண்பதை ஊக்குவிக்கவும், சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொ) மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான நீதிபதி தனசேகரன் தலைமை வகித்தாா்.
நீதிபதிகள் சுந்தரையா, செல்வகுமாா், ஜே.செல்வன்ஜேசுராஜா, கன்னியாகுமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் கலையரசிரீனா, நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் அசோக் பத்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, சத்தியமூா்த்தி, அருண்குமாா், இம்ரான், வழக்குரைஞா் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் சட்ட நடைமுறைகள், சமரச மையத்தின் செயல்பாடுகள், விரைந்து நீதி பெறுவது குறித்து நீதிபதிகள் பேசினா். பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நவ்லாக் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

