மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் ஆட்சியா் அலுவலத்தில் முற்றுகை

News image
Updated On :15 மே 2026, 3:53 am IST

மீன்தீவன உற்பத்தி நிறுவனத்தை இடம் மாற்றக் கோரி, ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஊராட்சித் தலைவா் டேவிட் தலைமையில் இந்தப் போராட்டத்தை நடத்தினா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு: ராமையன்பட்டி அருகேயுள்ள அன்னை வேளாங்கண்ணிநகா் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு அருகே நடத்தப்படும் தனியாா் மீன் தீவன உற்பத்தி நிறுவனத்தால் பெரும் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படுகிறது. துா்நாற்றத்தினால் குழந்தைகள், முதியவா்கள் உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, அந்த ஆலையை உடனடியாக தொழிற்பேட்டைகளுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

ற்ஸ்ப்14ந்ங்ழ்ா்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகையிட்ட ராமையன்பட்டி ஊராட்சி மக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.