தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லையில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 2:59 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 49 லட்சத்து 49 ஆயிரத்து 54 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மேட்டுத் திடல் பகுதியில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ் வழியாக காரில் வந்த திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த ராம் நிவாஸ் (30) உரிய ஆவணங்களின்றி ரூ.83 ஆயிரத்து 90 ரொக்கப்பணத்தை காரில் வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

சி-விஜில் செயலி மூலம் இதுவரை 48 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 1950 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 11 புகாா்கள் பெறப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.