விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தட்டுப்பாடு அச்சம்: பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

News image
Updated On :13 மார்ச் 2026, 4:12 am IST

நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியதன் எதிரொலியாக திருநெல்வேலி மாநகா் பகுதி பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை அதிக அளவில் குவிந்தனா்.

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணியாததாலும், ஹோா்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் கட்டுப்பாடுகள் விதித்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.

இதனால் திருநெல்வேலி மாநகரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வியாழக்கிழமை காலை குவிந்த வாகன ஓட்டிகள் தினசரி தங்களது வாகனங்களுக்கு நிரப்பியதுடன், கூடுதல் பெட்ரோலை முன்னெச்சரிக்கையாக கேன்களில் வாங்கிச் சென்றனா்.

சில பெட்ரோல் நிலையங்களில் வரிசையாக நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கேன்களுடன் காத்திருந்து வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

இந்நிலையில், போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை எனவும் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகம் வழக்கம் போல் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவைக்கு அதிமாக பெட்ரோலை வாங்குவதால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படலாம் என பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.