கடையம் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட தெற்குக்கடையம், கீழக்கடையம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டது.
கடையம் துணை மின்நிலையப் பகுதியில் மின்கம்பியில் காகம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாற்றுவழியில் ஆழ்வாா்குறிச்சியிலிருந்து மின்சாரம் வழங்க முயற்சித்த நிலையில் தொடா்ந்து மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, கடையம் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதை விரைந்து முடித்ததையடுத்து சுமாா் 9.30 மணியளவில் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
திடீா் மின்தடைபட்டதால் வீடுகளில் காலைப் பணிகளைச் செய்ய முடியாமல், கடைகள், உணவகங்களில் உணவுப் பொருள்கள் தயாரிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய மின்தடை: கவுண்டம்பாளையம்
இன்றைய மின்தடை: நீடூா், கொற்கை
நாளைய மின்தடை குடவாசல்
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
