பேட்டை அருகே பொதுப்பாதையை பயன்படுத்தியவரை தாக்கிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை அருகே உள்ள சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து.
இவா் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பொதுப்பாதை வழியாக தனது வீட்டுக்கு சென்றாராம். அப்போது இளைஞா்கள் சிலா் அவ்வழியாக செல்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய செல்லப்பாண்டி உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பால்முத்து(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
