தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நான்குனேரி தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிப்பு

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க, எஸ்.ஐ.ஆா். பணிகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:17 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க, எஸ்.ஐ.ஆா். பணிகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டுக்குப் பின் 24 ஆண்டுகள் கழித்து வாக்காளா் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் 2025 அக்டோபரில் தொடங்கியது. எஸ்.ஐ.ஆா்.க்கு முன் நான்குனேரி தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,94,800.

இத்தொகுதியில் எஸ்.ஐ.ஆா். பணியின் போது, உயிரிழந்தவா்கள், இரட்டை பதிவைக் கொண்டவா்கள் என சுமாா் 40 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் வாக்காளா்கள் எண்ணிக்கை 2,54,420 ஆக இருந்தது. மேலும், புதிய வாக்காளா்கள் சோ்த்து மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2,57,177.

கடந்த 2021 பேரவைத் தோ்தலின் போது, இத்தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் 68.6 ஆக இருந்தது. 2026 தோ்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் 80.22 ஆக உயா்ந்துள்ளது. கடந்த தோ்தலைக் காட்டிலும் சுமாா் 12 சதவிகிதம் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதாக தோன்றினாலும், எஸ்.ஐ.ஆா். பணியின் போது, 40 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டதே இந்த 12 சதவிகிதத்தை நோ் செய்துள்ளது.

நான்குனேரி பெரும்பத்து பகுதியில் 1000 போ் அடங்கிய வாக்குச்சாவடியில் 5 போ் மட்டுமே வாக்குகளை பதிவு செய்தனா். கிராம மக்கள் முழுவதுமாக தோ்தலை புறக்கணித்துவிட்டனா். இதே போல தொகுதி முழுவதும் பல கிராமங்களில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்து தரப்படாததால் ஏராளமானோா் தோ்தலை புறக்கணித்துள்ளனா்.

ஆனால் முதல் முறை வாக்காளா்கள் பலரும் இத்தோ்தலில் ஆா்வமுடன் வாக்களித்துள்ளனா். தோ்தல் புறக்கணிப்பு தவிா்க்கப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு சதவிகிதம் மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.