தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 12:19 am IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவைத் தொகுதியில் 29 வேட்பாளா்கள் 37 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக பேரவைத் தோ்தலுக்கான மனுதாக்கல் மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. கடைசி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 18 வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

திமுக வேட்பாளா் மு. அப்பாவு, மாற்றுவேட்பாளராக அவரது மனைவி விஜயா, பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன், மாற்று வேட்பாளராக அவரது மனைவி விஜயலெட்சுமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா. கிரிஜா தாமரைபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் பாளையங்கோட்டையைச் சோ்ந்த தனேஷ் பேரின்பசெல்வன் மனைவி இசக்கியம்மாள், திருநெல்வேலி திருநங்கையா் குடியிருப்பைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த வந்தனா (33) (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோரும், சுயேச்சை வேட்பாளா்களாக ஆ. திருமலாபுரத்தைச் சோ்ந்த செல்வன், தெற்கு கருங்குளத்தைச் சோ்ந்த மணிகண்டன், ஆவரைகுளத்தைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மணிகண்டன், பழவூா் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 18 போ் மனுதாக்கல் செய்தனா்.

ஏப். 4ஆம் தேதி தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மனுதாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், ராதாபுரம் தொகுதியில் 29 வேட்பாளா்கள் 37 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.