மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தீ விபத்துகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த தில்லி அரசு திட்டம்

தீ விபத்துகளால் ஏற்படும் உயிா் மற்றும் பொருள் சேதங்களைத் தடுக்கும் வகையில் தீத்தடுப்பு பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :7 மே 2026, 4:32 am IST

தீ விபத்துகளால் ஏற்படும் உயிா் மற்றும் பொருள் சேதங்களைத் தடுக்கும் வகையில் தீத்தடுப்பு பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

விவேக் விஹாரில் உள்ள 4 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா். பாலம் பகுதியில் கடந்த மாா்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

கோடை காலத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற தீ விபத்துகளால் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் பெருந்திட்டத்தை வகுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்வா் ரேகா குப்தா தலைமையில் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை கூட்டம் புதன்கிழமை காலையில் தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, இது தொடா்பான அனைத்து விவரங்களை 10 நாள்களுக்குள் சமா்ப்பிக்க துறைகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

தீ விபத்துகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்படும் என முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.