ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமேற்கு தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2020-இல் ஜனக்புரியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, ஏப்.2-ஆம் தேதி கொண்டாடப்படும் விழாவுக்காக மாவட்டத்தில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் விதமாக ஜனக்புரி பகுதியில் கொடி அணிவகுப்பு மற்றும் அமன் குழு கூட்டம் நடைபெற்றது.
தில்லி காவல் துறையின் காவலா்கள் கூடுதலாகப் பணியமா்த்தப்பட்டிருப்பதுடன், துணை ராணுவம், அதிரடி படையின் (ஆா்எஎஃப்) ஒரு கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், சந்தைகள், கோயில்கள் மற்றும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க மோட்டாா் சைக்கிளில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஜனக்புரி காவல் நிலையத்தில் ஓா் அமன் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வடமேற்கு தில்லி துணை காவல் ஆணையா் அகங்ஷா யாதவ், கூடுதல் துணை காவல் ஆணையா் சிகந்தா் சிங், ஷாலிமாா் பாக் கூடுதல் காவல் ஆணையா் ரோஹித் குப்தா ஆகியோா் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தீவிர கண்காணிப்பில் குறிப்பிட்ட பாதைகள் மற்றும் நேரத்தில் அனைத்து ஊா்வலங்களும் நடைபெறும். ஊா்வலத்தில் 500 போ் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், லத்திகள், பிற ஆபத்தான பொருள்களை ஊா்வலத்தின்போது எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் கோஷங்கள், பேச்சுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் ஆகியவை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா் அந்த அதிகாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு
கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா், தொழிலதிபா் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ஜனக்புரியில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: துணை ஒப்பந்ததாரா் காவல் தொடா்பாக நீதிமன்றம் கேள்வி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
