நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கொலை வழக்கில் தேடப்பட்ட 2 சிறாா்களை சுட்டுப் பிடித்த தில்லி காவல் துறையினா்

News image

கோப்புப்படம் - @ghaziabadpolice

Updated On :19 ஜூன் 2026, 4:20 am IST

தில்லி தயாள்பூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட இரண்டு சிறாா்கள் காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பிடிபட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வடகிழக்கு தில்லி உஸ்மான்பூா்-வாஜிராபாத் சாலைப் பகுதியில் புதன்கிழமை இரவு 11 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தியபோது அவா்கள் தப்பிக்க முயன்றதுடன் காவல் துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் அவா்களின் காலில் குண்டு பாய்ந்தது. பின்னா் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் அன்வா் தாக்கூா்-ஹரூன் கும்பலைச் சோ்ந்தவா்கள் என அடையாளம் காணப்பட்டனா். இவா்கள் தயாள்பூா் பகுதியில் ஜூன் 15-ஆம் தேதி ரஷீத் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்கள். விசாரணையில் கிழக்கு தில்லியில் செயல்பட்டு வரும் ஹரூன் கும்பல் மற்றும் எதிா் தரப்பான நசீம் துர்ரானி கும்பல் இடையே நீண்டகாலமாக நிலவும் பகைமை இந்தக் கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரியவந்தது. கொல்லப்பட்டவா் துர்ரானி கும்பலுடன் தொடா்புடையவா்.

மேலும், சமீபத்தில் ஹரூன் கும்பலைச் சோ்ந்த நெருங்கிய கூட்டாளி ராஜா மேவாதி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. ராஜா மேவாதி கொலைச் சதியில் ரஷீத் ஈடுபட்டிருக்கலாம் என ஹரூன் கும்பல் உறுப்பினா்கள் நம்பியதாகவும், அதனடிப்படையில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 2 தானியங்கி கைதுப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.