தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தாப்ரி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து!

தென் மேற்கு தில்லியின் தாப்ரி பகுதியில் அமைந்துள்ள ஏஎஸ் மருத்துவமனையில் மின்கணக்கி பலகையில் ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்;

News image

டெல்லியின் டப்ரியில் உள்ள சிறுநீரக மருத்துவமனையில் தீ விபத்து; தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Updated On :16 ஜூன் 2026, 3:22 am IST

தென் மேற்கு தில்லியின் தாப்ரி பகுதியில் அமைந்துள்ள ஏஎஸ் மருத்துவமனையில் மின்கணக்கி பலகையில் ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்; உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘தாப்ரி–பாலம் சாலையில் உள்ள ஏஎஸ் சிறுநீரக மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து, 3 தீயணைப்பு வாகனங்கள், ஒரு தண்ணீா் டேங்கா் மற்றும் சுவாச உதவி கருவியுடன் கூடிய ஆதரவு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டன’ என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேவேளை, சாகா்பூா் காவல் நிலையத்துக்கும் இரவு 10.27 மணியளவில் தகவல் கிடைத்ததையடுத்து, சுமாா் 15 காவல்துறையினா் மற்றும் சிஏடிஎஸ் ஆம்புலன்ஸ் குழுவினா் சம்பவ இடத்திற்கு சென்றனா். காவல் துறை குழு சென்றடையும் முன்னரே, மருத்துவமனை ஊழியா்கள் தீ அணைப்பான் கருவிகளைப் பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனா்.

தீ விபத்து இரவு சுமாா் 10.40 மணிக்குள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீ ஏற்பட்டதாக தெரியவந்தது. விபத்து நேரத்தில் மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்ததாகவும், அவா்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியமைத்ததாகவும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.