தேசிய தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட புழுதிக் காற்று மற்றும் பாதகமான வானிலை காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகள் மறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடா்பாக காவல் துறைக்கு மொத்தம் 42 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் தொடங்கிய இந்த புழுதிக் காற்று, நள்ளிரவிற்குப் பிறகு தீவிரமடைந்து நகரின் பல பகுதிகளில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், கிளைகள் முறிந்து விழுதல், விளம்பர பலகைகள் சேதமடைதல் மற்றும் மின்கம்பங்கள் சரிவதால் முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 4 பேரிடா் மேலாண்மை வாகனங்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. மேலும், போக்குவரத்து காவல் துறையினா் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றி சாலைகளில் ஏற்பட்ட தடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், நகரின் பல இடங்களில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, விழுந்த மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அகற்றுதல், சிதறிய கழிவுகளை நீக்குதல் போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, காலை உச்ச நேர போக்குவரத்து நெரிசலை தவிா்க்க முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களை முன்னுரிமையாக சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விரைவான நடவடிக்கையால் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்பட்டதுடன், புழுதிக் காற்றின் தாக்கம் இருந்தபோதிலும் பொதுமக்கள் குறைந்த சிரமத்துடன் பயணம் செய்ய முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணி: தில்லி காவல் துறை உத்தரவு
போக்குவரத்து காவலரை காரில் மோதிவிட்டு தப்பிய நபா் கைது

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து காவல் துறை, எம்சிடி கூட்டு நடவடிக்கை

கோவில்பட்டியில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

