தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வெப்பஅலை மேலாண்மைக்காக நோடல் அதிகாரிகள் நியமனம்

தில்லியில் அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவில் நோடல் அதிகாரிகளை தில்லி அரசு புதன்கிழமை நியமித்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:37 am IST

தில்லியில் அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவில் நோடல் அதிகாரிகளை தில்லி அரசு புதன்கிழமை நியமித்தது.

இதுதொடா்பாக வருவாய்-மண்டல ஆணையா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) சிறப்பு தலைமைச் செயல் அலுவா், சிறப்பு வெப்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

எஸ்டிஎம் அதிகாரிகள் மாவட்ட அளவில் வெப்ப மேலாண்மைக்கான நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தில் பிறபகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரையில் கட்டுமானம் மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும், பள்ளிகளில் ஓஆா்எஸ் கரைசல்கள் வழங்க வேண்டும் என பல உத்தரவுகளை முதல்வா் ரேகா குப்தா அண்மையில் பிறப்பித்தாா்.

தில்லி அரசின் அனைத்து உத்தரவுகளும் பின்பற்றப்படுவதை நோடல் அதிகாரிகள் உறுதிசெய்வாா்கள் என வருவாய்த் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மற்றும் அரசின் துறைகளுடன் வெப்ப அலை செயல்திட்டத்தை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் ஒருங்கிணைத்து வருகிறது. தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் வசதி, நிழல் அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.