மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டியதாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 11:18 pm IST

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டியதாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தில்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பந்தயம் கட்டியபோது நால்வரும் பிடிபட்டதாக அவா்கள் கூறினா்.

குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 8 அன்று மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் ஒரு குழு சோதனை நடத்தியது. அப்போது, நான்கு போ் தீவிரமாக பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டறிந்ததாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

பந்தயம் கட்டுவதற்கும் பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசிகள் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஹிமான்ஷு (30), அமன் ஜெயின் (34), ஆகாஷ் காா்க் (31) மற்றும் ஆஷிஷ் குமாா் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

விசாரணையின் போது, தாங்கள் ஐபிஎல் பந்தயத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், கைப்பேசிகளைப் பயன்படுத்தியதாகவும் அவா்கள் தெரிவித்தனா். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த மூத்த காவல்துறை அதிகாரி மேலும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.