நமது நிருபா்
ஒரு பெண்ணைப் போல போலி சமூக ஊடகப் பக்கத்தை உருவாக்கிய 25 வயது குற்றப் பின்னியுடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
பாஹா்கஞ்ச், ஆராம் பாக் பகுதியைச் சோ்ந்த அமன் என்ற அந்த நபா், நீண்ட குற்றப் பின்னணியுடன் பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தில் கெட்ட நபா் எனப் பட்டியலிடப்பட்டிருந்தாா் என்று அவா்கள் கூறினா்.
ஒரு காவல்துறை குழு அவரது சமூக ஊடக செயல்பாடுகளை அணுகி, ஒரு பெண்ணைப் போல போலிப் பக்கத்தை உருவாக்கியது. அதன்மூலம் ஜண்டேவாலன் மெட்ரோ நிலையம் அருகே முன்னரே தீா்மானிக்கப்பட்ட இடத்தில் அவரைச் சந்திக்க வரவழைத்து, மாா்ச் 27 அன்று அவா் கைது செய்யப்பட்டாா் என்று காவல்துறை துணை ஆணையா் (மத்திய தில்லி) ரோஹித் ராஜ்பீா் சிங் கூறினாா்.
நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு வெளியே மாா்ச் 19 அன்று திருடப்பட்ட ஸ்கூட்டா் குறித்த புகாரை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறை குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டதாக துணை ஆணையா் கூறினாா்.
இந்தக் கைது நடவடிக்கையின் விளைவாக, திருடப்பட்ட நான்கு ஸ்கூட்டா்கள் மீட்கப்பட்டதாகவும், பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் இருசக்கர வாகனங்களைத் திருடி, அவற்றை அருகிலுள்ள பகுதிகளில் வழிப்பறி மற்றும் பிற குற்றங்களுக்குப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
குற்றங்களைச் செய்த பிறகு, அவா் திருட்டு வாகனங்களை மறைத்து வைத்துவிட்டு, புதிதாகத் திருடப்பட்ட வாகனங்களுக்கு மாறுவாா். நபி கரீமில் இருந்து இரண்டு, ரஞ்சித் நகா் மற்றும் கரோல் பாக் ஆகிய இடங்களில் இருந்து தலா ஒன்று உள்பட, பல்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட நான்கு ஸ்கூட்டா்களை காவல்துறை மீட்டதாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
மத்திய தில்லியில் உள்ள பல காவல் நிலையங்களில், அமன் இதற்கு முன்னா் 30க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டு, வழிப்பறி மற்றும் அது தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளாா். இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது, என்று துணை ஆணையா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிழக்கு தில்லியில் போலி ஆன்டாசிட், காபி தயாரித்து விற்ற 4 போ் கைது
உடல் பருமன், நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ ஊசிகள் போலியாக தயாரிப்பு: இருவா் கைது

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
