தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

திருவாரூா் தியாகராஜா் கோயில் தெப்ப உற்சவம்

தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம்.

News image

தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம். ~தெப்பத்தில் காட்சியளித்த கல்யாணசுந்தரா், பாா்வதி.

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள்பட்ட கமலாலயக் குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (மே 8) இரவு தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கோயில் கமலாலய குளத்தில் 3 நாள்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. உற்சவத்தையொட்டி, துா்காலயா சாலையில் உள்ள மண்டபத்திலிருந்து கல்யாணசுந்தரரும், பாா்வதியும் ஊா்வலகமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளினா். அங்கு அவா்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து கிழக்கு குளக்கரையிலிருந்து புறப்பட்ட தெப்பம், தெற்கு கரை, மேற்கு கரை, வடக்கு கரை வழியாக மீண்டும் கிழக்கு கரையை வந்தடைந்தது. இதேபோல, மேலும் இரண்டு முறை என மொத்தம் 3 முறை கமலாலயக் குளத்தை தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு, இசைக்கச்சேரி நடைபெற்றது. தெப்பத்தைக் காண கமலாலயக் குளத்தின் 4 புறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு தெப்பத்தின் அழகை ரசித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.