தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :25 மார்ச் 2026, 5:49 am IST

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிவுற்றவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இதையடுத்து, திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில், வாக்கு இயந்திரம் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் அறைகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, திருவாரூா் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.