பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சாா்பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image

முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகம்.

Updated On :5 ஜூன் 2026, 7:17 am IST

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை சாா்பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் சாா்பதிவாளா் அலுவலகங்களில், இடைத்தரகா்களின் ஆதிக்கமும், லஞ்ச லாவண்யமும் அதிகரித்து வருவதாக பரவலாக புகாா்கள் வந்தன.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில் திடீா் சோதனை நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, முத்துப்பேட்டையில் மன்னாா்குடி சாலையில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில், திருவாரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15,000 ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.