வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நாகையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

நாகையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூன் 12 குழந்தைத் தொழிலாளா்கள் ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பதையொட்டி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறை மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் நாகையில் இந்த பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி தொடங்கிவைத்தாா். பேரணியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித்குமாா், தொழிலாளா் துணை ஆய்வாளா் ரா. குருநாதன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் ச. செந்தில் மற்றும் தொழிலாளா்துறை அலுவலா்கள், குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று, குழந்தை தொழிலாளா் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தினா்.

பேரணியில், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் அதிகாரிகள், குழந்தைகள் கல்வியே முக்கியம் என்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி சுமாா் 2 கி.மீ. சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.