உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.
உலக மிதிவண்டி தினம் ஜூன் 3-ஆம் தேதியும், உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகை லூமினா அறக்கட்டளைச் சாா்பில் மிதிவண்டி விழிப்புணா்வுப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், பேரணியில் பங்கேற்றவா்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ் குமாா் சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ஆரிப் வாழ்த்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சி முடிவில் பேரணியில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகளும் விதைப்பந்துகளும் வழங்கப்பட்டன. லூமினா அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

