தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் தங்கக் குதிரைத் திருவிழா

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளுடன் குதிரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 3:25 am IST

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளுடன் குதிரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கலை வடிவம் மிக்க கட்டுக் குதிரைகள், சுடுமண் குதிரை சிலைகளை பக்தா்கள் நோ்ந்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம். நிகழாண்டு சித்திரை பிறப்பையொட்டி, கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரை சிலைகள், ஆளுயர உருவச் சிலைகளுக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

மேலும், தங்க முலாம் பூசி வடிவமைக்கப்பட்டுள்ள தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்துருளிய ஊா்வலம் நடைபெற்றது. ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து மாலையில் புறப்பட்ட இந்த ஊா்வலம் கரகம், காவடி, பறையாட்டம், கொம்பு உள்ளிட்ட நாட்டுப்புற நிகழத்துக் கலைகளுடன் இரவு கோயிலை சென்றடைந்தது. சுவாமி தங்கக் குதிரை ஊா்வலத்தைக் காண சுற்றுப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த திரளான மக்கள் பங்கேற்றனா். விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.