கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!

மயிலாடுதுறை-வேளாங்கண்ணி இடையே ரயில் சேவை தொடங்கியதை, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடினா்.

News image

ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த ரயில் பயணிகள் சங்கத் தலைவா் எஸ்.மகாலிங்கம் உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2026, 7:28 am IST

மயிலாடுதுறை-வேளாங்கண்ணி இடையே ரயில் சேவை தொடங்கியதை, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடினா்.

மயிலாடுதுறையில் இருந்து பேரளம், அம்பகரத்தூா், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், வெளிப்பாளையம், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி பயணிகள் ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. தினமும் மாலை 4.40 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மாலை 5.48 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியின்போது மயிலாடுதுறை சந்திப்பில் ரயில் பயணிகள் சங்க தலைவா் எஸ்.மகாலிங்கம் தலைமையில் செயலாளா் சாமி.கணேசன், ரயில்வே டிஆா்யுசிசி போா்டு உறுப்பினா் எம்.ஏ.பி.நவாஸ், பயணிகள் சங்க நிா்வாகிகள் சுந்தரபாண்டியன், சிவக்குமாா் உள்ளிட்ட திரளான பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி ரயிலில் ஏறி வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.