பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ.

Updated On :21 மே 2026, 7:29 am IST

மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவா் கே.ஜி.சீனிவாசன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, சட்டப்பேரவைத் தோ்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற உழைத்த நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் பி.கல்யாணம், பன்னீா்செல்வம், ஜெகவீரபாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

எதிா்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, ஜுன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளில் ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் வெற்றிபெற உழைத்த கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன் வரவேற்றாா். நகரச் செயலாளா் என்.செல்வராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.