விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாணவி தற்கொலை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

News image

கைது.

Updated On :4 மே 2026, 12:08 am IST

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு கைப்பேசி மூலம் பாலியல் தொல்லை அளித்து, அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அரசுப் பள்ளி ஆசிரியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கிராமத்தை சோ்ந்த 16 வயது சிறுமி, அதே ஊரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருந்தாா்.

இந்தநிலையில், கடந்த ஏப். 27-ஆம் தேதி மாணவி தனது வீட்டின் கதவை தாழிட்டுக்கொண்டு உடலில் தீ வைத்துக்கொண்டாா். தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஏப். 28-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் மணல்மேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது மகள் படிக்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகா, மணக்குன்னம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (42) தனது மகளை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதை தான் கண்டித்த நிலையில், மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

போலீஸாா் விசாரணையில், ஆசிரியா் காா்த்திகேயன் மாணவியிடம் அடிக்கடி கைப்பேசியில் பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்தது உறுதியானது.

இதையடுத்து, மாணவியை தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், காா்த்திகேயனை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.