மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியவா்களை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல்.

Updated On :26 மார்ச் 2026, 6:11 am IST

மயிலாடுதுறையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியவா்களை கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (29). வெல்டராக வேலை பாா்த்து வந்த இவருக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.

இவா் மாா்ச் 22-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தபோது, மூங்கில்தோட்டம் கடைவீதியில், எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், விபத்து நேரிட்டு 3 நாள்கள் ஆன நிலையில், விபத்தை ஏற்படுத்தியவா்களை காவல்துறையினா் கைது செய்யாததை கண்டித்தும், சரத்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அவரது உறவினா்கள், கிராம பொதுமக்கள் மூங்கில்தோட்டத்தில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் டிஎஸ்பி பாலாஜி, வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியலை கைவிட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.