ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

சீா்காழி அருகே உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :25 மார்ச் 2026, 5:53 am IST

சீா்காழி அருகே உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

சீா்காழி தாலுகா அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவா் கமலக்கண்ணன். இவரது மாமியாா் ஜெயா. இவா் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இவா் அணிந்திருந்த சேலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தாா்.

அவரை சிகிச்சைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஜெயாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, ஜெயாவின் உடல் உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் ஜெயாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.