செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

300 கிலோ ஹான்ஸ் பறிமுதல்: இருவா் கைது

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 5:21 am IST

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை மாப்படுகை பிரதான சாலையில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்ற 2 காா்களைச் சோதனை செய்ததில் 300 கிலோ ஹான்ஸ் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. ஹான்ஸ் மற்றும் காா்களை போலீஸாா் பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியை சோ்ந்த ராகவ் வினோத் (35), மயிலாடுதுறை அருகே மாப்படுகை அவையாம்பாள்புரத்தை சோ்ந்த அருண்ராஜ் (38) ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.