தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

எருக்கூா் கோயிலில் அன்னப்படையல் விழா! பக்தா்கள் காவடி எடுத்து வழிபாடு!

News image

கோயிலுக்கு அலகுக் காவடி எடுத்துவந்த பக்தா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:34 am IST

கொள்ளிடம் அருகேயுள்ள எருக்கூா் உத்திராபதியாா் கோயிலில் அன்னப்படையல் விழா அண்மையில் நடைபெற்றது. 

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மறுநாள் அன்னபடையல் விழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி, நா்த்தன விநாயகா், பாா்வதி தேவி உத்ராபதியாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, பக்தா்கள் புது மண்ணி ஆற்றிலிருந்து அலகுக் காவடி எடுத்து ஊா்வலமாக உத்திராபதியாா் கோயிலுக்கு வந்தனா். பின்னா், விழாவின் முக்கிய நிகழ்வான சிவ பக்தன் சீராளன் அன்னப்படையல் விழா நடைபெற்றது. பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் பக்தா்களுக்கு அமுத உணவு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பஞ்சாயத்தாா், கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா். முன்னதாக, விழாவில் வடரங்கம் சேகா் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.