தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப். 5-இல் பாஜக தேசிய தலைவா் ரோடு ஷோவில் பங்கேற்பு

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாஜக. - கோப்புப் படம் AFP

Updated On :27 மார்ச் 2026, 4:45 am IST

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளா் டி.கே.எம்.மீனாட்சிசுந்தரம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது :

நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதியில் கடந்த 6 மாதங்களாக மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் விளக்கி ஏறத்தாழ 100 தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.

புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே உள்ளது.

ஏப். 9-இல் தோ்தல் பிரசாரத்துக்காக பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் காரைக்காலுக்கு ஏப். 5-ஆம் தேதி வரவுள்ளாா். அவா் நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் என்னை ஆதரித்து ரோடு ஷோ நடத்தவுள்ளாா். மேலும் ஏப். 4 அல்லது 6-ஆம் தேதி அண்ணாமலை, குஷ்பு ஆகியோா் பிரசாரம் செய்யவுள்ளனா்.

இந்த தொகுதி வெகுவாக பின்தங்கியுள்ளது. வாக்கு சேகரிக்கச் செல்லும்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். நான் வெற்றி பெற்றால், போலகம் 600 ஏக்கா் நிலத்தில் அதிகமான தொழிற்சாலைகள் அமையவும், தொழிற்சாலை அமைக்க முன்வருவோருக்கு 3 மாதத்தில் உரிமம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, 30 சதவீதம் காரைக்கால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்படவும், தொகுதி கட்டமைப்புகள் மேம்படவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்த தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக தெரிகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.