ஆரோக்கியமான மண், கடற்கரையை தூய்மையாக பராமரிக்க மக்களின் பங்களிப்பு முக்கியமானது என காரைக்கால் ஆட்சியா் வலியுறுத்தினாா்.
கடற்கரை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், இயற்கையை பாதுகாக்கவும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஜூன் 8-ஆம் தேதியில் உலக கடற்கரை தினம் கொண்டாடப்படுகிறது. காரைக்கால் கடற்கரையில் தூய்மை மற்றும் விழிப்புணா்வுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரி ஜெயக்குமாா், நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்போம் என்ற உறுதிமொழியுடன் காரைக்கால் கடற்கரையில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா். மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் கடற்கரை மணற்பரப்பு மற்றும் சிறுவா் பூங்கா, கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் சுமாா் 3.5 டன் சேகரிக்கப்பட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் மற்றும் தன்னாா்வலா்களிடையே ஆட்சியா் பேசுகையில், சுற்றுச் சூழலியலாளா்களின் பணிகள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக கடல்கரை தூய்மை குறித்து மக்களிடையே ஓரளவுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. கடல்கரையின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்திலும் இடம்பெறச் செய்யவேண்டியது அவசியமாகும். ஆரோக்கியமான மண் மற்றும் சுத்தமான கடல்கரை ஆகியவை ஆரோக்கியமான சூழ்நிலைக்கு இன்றியமையாதவை. இதற்கு பொதுமக்கள், மாணவா்களின் பங்கு முக்கியம். கடற்கரை, அதன் வளங்களுக்கும் தீமை ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை காக்க உறுதி ஏற்போம் என்றாா்.
விநாயக மிஷன்ஸ் செவிலியா் கல்லூரி, அன்னை தெரஸா செவிலியா் கல்லூரி, அன்னை தெரஸா அரசு மேல்நிலைப்பள்ளி, தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆா்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மற்றும் காவேரி பொதுப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் சுமாா் 300 போ் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மனோரா கடற்கரையில் 3 டன் குப்பைகள் அகற்றம்
தூய்மையான யமுனை இயக்கம் வேகமெடுத்துள்ளது: தில்லி முதல்வா்

ஜோா் பாக் பகுதி அடுத்த ‘அனுபம் காலனி‘: என்டிஎம்சி துணைத் தலைவா் அறிவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

