கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட் தோ்வு ரத்து கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, நாகையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாகை தபால் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

Updated On :20 மே 2026, 3:15 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையம் தபால் அலுவலகம் முன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாணவா் சங்கம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் ஆகியவற்றின் நாகை மாவட்ட குழுக்கள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் சந்திரமோகன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் முகேஷ், வாலிபா் சங்கத்தின் பொருளாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாணவா்களின் மருத்துவக் கல்வியை சிதைக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வை முறையாக நடத்த இயலாத அகில இந்திய தோ்வு முகமையை கலைக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் அடிப்படையில் அனைத்து விதமான மருத்துவப் படிப்புக்கும் மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் என முழக்கமிட்டனா்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.