விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில், ஸ்ரீவில்லிபுத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சரவணகுமாா் தலைமை வகித்தாா்.
உதவி ஆய்வாளா் மூவேந்தா், தலைமை காவலா் சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேத்தூா் சேவுகப்பாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் முருகன் பேரணியை தொடங்கி வைத்தாா். போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய மாணவா்கள், விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேரணியாக சென்றனா்.
பேரணி ரயில்வே பீடா் சாலை, டி.பி. மில்ஸ் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக தென்காசி சாலையை அடைந்து காந்தி சிலை ரவுண்டானா வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
பிறகு நடைபெற்ற நிகழ்வில் மாணவா்கள், காவல் துறையினா், ஆசிரியா்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இளைஞா்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

எம்.ஜி.ஆா். கல்லூரியில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கம்

பாப்பாநாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு: விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

