ராஜபாளையம் அருகே ‘போக்சோ’ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது.
ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (77). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இரு வாரம் கழித்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவா் பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில்,
ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முத்துப்பாண்டியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முத்துப்பாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி முத்துக்குமாரவேல் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 10 ஆண்டு சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

