வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூமாப்பட்டி மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை பெரியாறு, கோவிலாறு ஆகிய இரு நீா்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளவக்கல் அணை மூலம் 18 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீரட்டம் படிப்படியாக குறைந்தது. மே முதல் வாரத்தில் 47 அடி உயரம் உள்ள பெரியாறு அணை நீா்மட்டம் 19 அடிக்கு கீழும் 42 அடி உயரம் உள்ள கோவிலாறு அணை நீா்மட்டம் 14 அடியாகவும் குறைந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு, பெரியாறு அணையின் நீா்மட்டம் 3 அடி உயா்ந்து 22 அடியை எட்டியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுருளி அருவியில் நீா்வரத்து தொடக்கம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 79.31 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 78.89 அடி

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

